இந்தி “ராவணன்” பட தோல்வியால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகி உள்ளார். தமிழில் “ராவணன்” என்றும் தெலுங்கில் “வில்லன்” என்றும் இப்படம் ரிலீசானது. இவ்விரு மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தியில் மட்டும் எதிர்பார்த்தப்படி ஓடவில்லை.
“ராவணன்” படம் தனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று ஐஸ்வர்யாராய் கூறி உள்ளார். அவர் நம்பிக்கை தகர்ந்து விட்டது.
இதுவரை நடித்த படங்களிலேயே ராவணனில் தான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிப்பை வெளிப்படுத்தினார். காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கி தன்னை வருத்திக்கொண்டார். திரையில் ஐஸ்வர்யாராய் நடிப்பை எல்லோரும் பாராட்டினார். ஆனால் படம் ஜெயிக்கவில்லை. வீட்டுக்குள் முடங்கி வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
இந்தி “ராவணன்” தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமிதாப்பச்சன் எடிட்டிங் சரி இல்லை என்றும் கதை குழப்பமாக இருக்கிறது என்றும் தெரிவித்த கருத்தும் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதை தன்னிடம் டெலிபோனில் கூறி இருக்கலாம். இணைய தளத்தில் வெளியிட்டது தவறு என்று மணிரத்னமே சொல்லி வருத்தப்பட்டார். அமிதாப்பச்சன் கருத்தினால் ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து போனது என்கின்றனர்.
“ராவணன்” கேரக்டரில் அபிஷேக்பச்சனை நடிக்க வைத்தது தவறு என்றும் விமர்சிக்கப்படுகிறது. விக்ரம், ஐஸ்வர்யாராயை கணவன், மனைவியாகவும் ஐஸ்வர்யாவை கடத்திப்போய் காட்டில் வைத்து சித்ரவதை செய்பவராக அபிஷேக்பச்சனையும் நடிக்க வைத்துள்ளனர். நிஜ வாழ்வில் கணவன், மனைவியானவர்களை திரையில் வேறு மாதிரி காட்டியது ரசிகர்களை ஈர்க்காமல் போய் விட்டது. இதுவே தோல்விக்கு காரணம் என்கின்றனர்.
படம் தோத்தா என்ன ஜெயிச்சா என்ன. இதெல்லாம் மணி ரத்தினம், விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா இவங்களுக்குத் தான் முக்கியம். நமக்கு என்ன. வேறேதாவது முக்கியமான விஷயமா எழுதுவீங்களா
nalla padam yedukka yethanayo kathaygal irukku aanal maniratnam.barathiraja,pakyaraj,palachandar,varisayil sernthuvittar.paruppu vegamattengrathu varisayaga flop.manivannanukku aduthu maniratnathukkum oru idam irukku ...comedian roll
படம் தோத்தா என்ன ஜெயிச்சா என்ன. இதெல்லாம் மணி ரத்தினம், விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா இவங்களுக்குத் தான் முக்கியம். நமக்கு என்ன. வேறேதாவது முக்கியமான விஷயமா எழுதுவீங்களா
MIBS miga sariyaga sonnar.thanks.
hi,
see the link
http://alturl.com/rwty
எந்த ப்ளாக் போனாலும் இததான் எழுதறிங்க வேற எதுமே இலையா படம் மட்டும்தான் ....இதே பேசி பேசி தன அவனுக நம்ப காசுல படம் எடுத்துட்டு ஏதோ ராக்கெட் பண்ணி fail அயிடமாரி பேசறணுக...தாங்க முடியலைடா சாமி...டிவி ,பம், இன்டர்நெட் எங்க போனலு இதேதா..தமிழ் அழியாம வேற என்ன ஆகும். ..யோசிங்க பாஸு..இல்லாடி நீங்கலு மணிரத்னம் லிஸ்ட் ல போய்டுவிங்க ...புதுசா interest எழுதுங்க ....
மேலும் வளர வாழ்த்துக்கள்
by அன்பு நண்பன்