டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்திற்கு அத்திவாரம் போட நிலத்தைத் அகழ்ந்தபோது இவை வெளி வந்துள்ளன. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த போலீசார் அதை மீட்டெடுத்துள்ளனர். கடந்த 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் திகதி இதே பகுதியில் பறந்தபோது ஜேர்மன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிரிட்டன் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கியே இதுவென்று தெரிவிக்கப்படுகிறது. இதை சுத்தம் செய்து நூதனசாலையில் வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.


0 comments