Welcome To Minitamil.Blogspot.Com

ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய பிருத்வி&2 அணு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதில், பிருத்வி ரக ஏவுகணையும் ஒன்று. இதன் வரிசையில் பிருத்வி &2 ஏவுகணை தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் வல்லமை படைத்த இது, ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் உள்ள ஓருங்கிணைந்த சோதனை வளாகத்தில் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் இதை பார்வையிட்டனர். இந்த ஏவுகணையில் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை பொருத்தி தாக்க முடியும். இதை 1000 கிலோவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களில் 4வது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்வி&2 உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு, அணுகுண்டை தூக்கிச் செல்லும் திறன், இலக்கை துல்லியமாக தாக்கும். ஒரிசா மாநிலம் பாலசூர் கடற்கரை அருகே சாண்டிப்பூரில் வெற்றிகரமாக சோதனை. 500 கிலோ எடையை தூக்கிச் செல்லும்.

ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய பிருத்வி&2 அணு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதில், பிருத்வி ரக ஏவுகணையும் ஒன்று. இதன் வரிசையில் பிருத்வி &2 ஏவுகணை தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் வல்லமை படைத்த இது, ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் உள்ள ஓருங்கிணைந்த சோதனை வளாகத்தில் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் இதை பார்வையிட்டனர். இந்த ஏவுகணையில் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை பொருத்தி தாக்க முடியும். இதை 1000 கிலோவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களில் 4வது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்வி&2 உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு, அணுகுண்டை தூக்கிச் செல்லும் திறன், இலக்கை துல்லியமாக தாக்கும். ஒரிசா மாநிலம் பாலசூர் கடற்கரை அருகே சாண்டிப்பூரில் வெற்றிகரமாக சோதனை. 500 கிலோ எடையை தூக்கிச் செல்லும்.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!