சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னை பிலிம் சேம்பரில் இன்று நடந்தது.
இவ்விழாவில் நடிகர் சூர்யா, ‘’நிறையை பேர் இந்தப்பணியை செய்கிறார்கள். நாங்க சினிமாக்காரங்க அதனால் செய்வது வெளியே தெரிந்துவிகிறது. இந்தப்பணி தொடர நானும், தம்பியும் சினிமாவில் அதிக படங்களில் நடித்து முடிப்போம். இன்னும் பலருக்கு உதவி செய்வோம்.
தமிழர்கள் கல்விக்கு உதவுகிறார்கள் என்ற நிலை வரவேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம். இங்கே பேசிய ஒரு மாணவி அகரம் பவுண்டேசன் மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என்று பேசினார். நிச்சயமாக இது மக்கள் இயக்கமாக மாறும்’’ என்று தெரிவித்தார்.
0 comments